நபிகள் நாயகம் கூறிய நற்குணத்தின் அடையாளங்கள்

நபி (ஸல்) அவர்கள் ஒருவனிடம் நற்குணம் இருக்குமாயின் அவனிடம் கீழ்க்கண்ட பண்புகள் இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

  • மிகுதியாக வெட்கப்படுதல்,
  • பிறருக்குத் தொல்லை கொடாதிருத்தல்,
  • உண்மை பேசுதல்,அதிகம் பேசாதிருத்தல்,
  • மிகுதியான நற்செயல்களும்-வணக்கவழிபாடுகளும் செய்தல்,
  • பிறருடன் (மக்களுடன்) சேர்ந்து வாழ்தல்,
  • நல்லவனாக இருத்தல்,
  • கண்ணியமாக இருத்தல்,
  • பொறுமையுடன் இருத்தல்,
  • நன்றியுணர்வுடன் இருத்தல்,
  • திருப்தியுடையவனாயிருத்தல்,
  • ஒழுக்கத்துடன் இருத்தல்,
  • நண்பனாக இருத்தல்,
  • பிறரை நேசிக்கும் தன்மை,
  • அல்லாஹ்வின் சினத்திற்கு ஆளாகாதிருத்தல்,
  • பிறரை ஏசாதிருத்தல்,
  • கஞ்சத்தனம், புறம்பேசல், குறைகூறல், தீவிர வாதம் இவைகளை விட்டும் நீங்கியிருத்தல்,
  • முகமலர்ச்சியுடன் இருத்தல்,
  • சகிப்புத் தன்மை,
  • தேவைகளைக் குறைத்துக் கொள்ளுதல்.

இவைகளே நற்குணத்தின் அடையாளங்களாகும்.

மேற்கூறிய அனைத்து குணங்களும் சம்பூர்ண சாந்தி நபி(ஸல்) அவர்களிடம் நிறைந்திருந்தன,

‘இன்னும் நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்’

என்று இறைவன் தன் திருமறையிலே அருளியுள்ளான்.

நபிவழிபேன நம்மவர் அனைவர்க்கும் நாயனருள் செய்வானாக!

local_offerevent_note July 28, 2021

account_box admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *