Author: admin

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி)

அவதரித்த நாள், கி.பி 1078 – ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி ஹிஜ்ரி 471-ம் ஆண்டு ரமலான் பிறை முதல் நாள் திங்கட்கிழமை அதிகாலை. அவதரித்த இடம் காஸ்பியன் கடலுக்குத் தெற்கே பாரசிகமொழி வழங்கிய தபரிஸ்தான் மாநிலத்தில் ஜீலான்…

நபிகள் நாயகம் கூறிய நற்குணத்தின் அடையாளங்கள்

நபி (ஸல்) அவர்கள் ஒருவனிடம் நற்குணம் இருக்குமாயின் அவனிடம் கீழ்க்கண்ட பண்புகள் இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்கள். மிகுதியாக வெட்கப்படுதல், பிறருக்குத் தொல்லை கொடாதிருத்தல், உண்மை பேசுதல்,அதிகம் பேசாதிருத்தல், மிகுதியான நற்செயல்களும்-வணக்கவழிபாடுகளும் செய்தல், பிறருடன் (மக்களுடன்) சேர்ந்து வாழ்தல், நல்லவனாக இருத்தல், கண்ணியமாக…

முஹ்யித்தீன் பிறந்த தமிழ்நாடு

 ‘‘இந்துஸ்தானத்திலிருந்து வரும் ஏகத்துவ தென்றலை நான் நுகர்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று நபிபெருமானார்(ஸல்) அவர்கள் இதயம் குளிர்ந்த ’ஹிந்த்’ என்று அறியப்பட்ட இந்தியத் திருநாட்டை காண வேண்டும் என்று கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் விரும்பினார்கள். அப்படி நினைத்த சில மணித்துளிகளில் இந்துஸ்தானத்தின்…

பாக்தாதில் பிறந்த காதிரிய்யா தரீக்கா தமிழகம் வந்த வரலாறு

சங்கைக்குரிய முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் மறைந்த பின்னர் அவர்களின் புத்திரர்களும் சீடர்களும் பிரதிநிதிகளான கலிஃபாக்களும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காதிரியா ஞான மார்க்கத்தையும் அதன் திக்ரு பயிற்சி முறைகளையும் மக்களுக்கு உபதேசித்து இறைவனை நெருங்கும் பாதையில் மக்களை அழைத்தேகினார்கள். ஆண்டகை…

நபிமார்களின் வாரிசுகள்

இறைவணக்கம் (இபாதத்) என்பது ஒரு கைத்தொழிலாகும் இத்தொழிலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களே தெய்வ சமீபத்துவமும் சத்தியமும் வாய்ந்த அவுலியா அப்தால்களாவர். நபிமார்கள் தோன்றி மக்களுக்கு நேர்வழி காட்டிய காலம் முடிவு பெற்றுவிட்டது. எனினும் கியாமத் நாள் வரையும் உலகினர்க்கு வழிகாட்டப்பட வேண்டிய அவசியம்…

நாகூர் தர்காவில் இவற்றை கவனித்திருக்கிறீர்களா?

தெற்கிழக்காசியாவின் ஞானதீபமாம் நானிலம் போற்றிடும் நாகூரில் கொலுவீற்று ஆன்மீக அரசாலும் நம் கருணைக்கடல் கஞ்சஷவாயி காதிர்ஒலி நாயகத்தின் கீர்த்திமிக்க தர்கா எனும் திருப்பள்ளிக்கோட்டையின் வனப்பையும் அமைப்பையும்போல் உலகில் வேறெங்கும் கண்டதில்லையென்று உலகம் சுற்றிய அறிஞர்கள்பலர் புகழ்ந்திருக்கின்றனர். அனுதினமும் அண்ணலரின் வாசலில் ஆயிரக்கணக்கானோர்…

நாகூர் கந்தூரி நிகழ்ச்சிகளின் விளக்கமும் வரலாற்றுப்பின்னணியும்

தெற்கிழக்காசியாவின் ஞான தீபம் ஹஜ்ரத் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் தர்கா உலகப்பிரசித்தம் வாய்ந்தது. வருடம்தோறும் நடைபெறும் நாகூர் ஆண்டகையின் கந்தூரி உரூஸ் பெருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன, மொழி, மத பாகுபாடுகளைக் கடந்து நிறைந்த பக்தர்கள்…

இறைவனை நேசிப்பது எப்படி? How to Love God

நம்மில் பெரும்பாலானோரின் இதயத்தில் இவ்வினா உதித்திருக்கும். சிலர் ஆன்மீக வழிகாட்டிகளான ஷெய்குமார்களிடம் இக்கேள்விக்கான விடையை தேடியிருப்பார்கள். சிலர் ஞான நுால்களை புரட்டியிருப்பார்கள். இன்னும் சிலர் இறைநேசர்களின் வாசல்களில் தஞ்சம்கொண்டு தவமேற்றிருப்பார்கள், சிலர் ஆண்டவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தொழுது அவனது ஏவல் விலக்கல்களை…

பரங்கிப்பேட்டை – அதிசயங்கள் நிறைந்த ஆன்மீக பூமி

தமிழகத்தின் ஆன்மீக அருட்தலங்கள் நிறைந்த நகரங்களுள் ‘பரங்கிப்பேட்டை’ தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாஸ்கோடகாமா கடல்நெடும்பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவுக்கும் இந்திய துணைகண்டத்துக்குமிடையே வழிகண்டுபிடித்த நாள்முதல் போர்த்துகீசியர் கூட்டம் கூட்டமாக கேரள கரையிலும் சோழமண்டலக் கரையிலும் வந்திறங்கினார்கள். அப்படி அவர்கள் தமிழக கடற்பகுதியில் வந்திறங்கிய…

மாபெரும் ஞானி ஹஜ்ரத் முஹம்மது ஹுசைன் சாஹிப் நாகூரி

திக்குத் திகந்தமும் கொண்டாடும் நாகூர் பதியில் ஹஜரத் காதிர் ஒலி ஆண்டகையின் ஆன்ம குமாரர் ஹழ்ரத் ஷாஹே தௌலத் செய்யது முஹம்மது யூசுப் தாதாவின் மைந்தர் செய்யது சுல்தான் கபீர் நாயகத்தின் குலவழியில் ‘அவ்ளாதுல் அத்ஹார்‘ என்னும் பரிசுத்த சந்ததியில் அஷ்ஷெய்க்…

பயமும் நிம்மதியும்

கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆண்டகை அவர்கள் கூறுகிறார்கள் அன்பர்களே, மெய்ப்பொருளான இறைவனின் சந்திப்பு ஏற்படாதவரை, உங்கள் பாதங்கள் அவனுடைய திக்கில் ஸ்திரம் பெறாதவரை, அவன் அருகே உயர்வதர்குரிய சிறகுகளை பெற்றுக்கொள்ளாதவரை சதா பயந்தவர்களாய் இருங்கள். திருப்தியும் நிம்மதியுமடைந்து…

நோன்பின் இரகசியம்

நோன்பின் தாத்பர்யம் யாதெனில் நம்முடைய இந்த பூத உடலை ஊனில்லாமல் உணவில்லாமல் வற்றவிடும்போது அது வலுவிழந்து சூக்கும உடலான ஆத்தும உடலை கிலிர்ந்தெழச்செய்கிறது! இப்படி பூத உடலை வற்றவைத்து சூக்கும உடலை எழச்செய்து கைக்கொள்வதற்காகவே இந்த நோன்பு இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது! அறிந்துகொள்ளுங்கள்!கௌதுகள்…

பண்ருட்டி தர்கா

ஞான மகான் பண்ருட்டி நுார் முஹம்மது ஷா ஒலியுல்லா அஸ்ஸலாமு அலைக்கும், பழம் மணக்கும் பண்ருட்டியில் அருள் மணக்கும் அவ்லியாவின் தர்கா என்னும் அடக்கஸ்தலம் பிரசித்திபெற்று விளங்குகிறது. இங்கு ஜாதி மத பேதமின்றி முஸ்லிம்களோடு இந்துக்களும் கிறிஸ்துவர்களும் நாள்தோறும் ஆண்டகையைக் காண…

Trichy Dargah History

Hazrath Nathervali Darga popularly known as NatharSha Pallivasal is located in Tiruchirappalli, Tamil Nadu. https://goo.gl/maps/gW3eeBSpzBbbQFa4A A brief History on Trichy Thable Alam Badhusha Nathervali Oliyullah – Hazrat Nathar vali Sha…